ஈரானில் குண்டுவெடிப்புச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்பதாக ஐ.எஸ். அறிவிப்பு
2024-01-05 09:45:46

ஈரானின் கேர்மன் நகரில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்புத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாகத் தீவிரவாத அமைப்பான ஐ.எஸ். 4ம் நாள் சமூக ஊடகத்தில் அறிவித்துள்ளது என்று ஈரான் தேசியத் தொலைக்காட்சி நிலையம் செய்தி வெளியிட்டது.

மேலும், ஐ.எஸ். வெளியிட்ட அறிவிப்பில், கேர்மன் நகரில் மனித குண்டுவெடிப்புத் தாக்குதலை 2 நபர்கள் தொடுத்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.