கொரிய தீபகற்பத்தின் சூழ்நிலை பற்றிய சீனாவின் நிலைப்பாடு
2024-01-05 18:31:32

தென் கொரிய ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, கொரிய தீபகற்பத்தின் மேற்கு பகுதிக் கடற்கரையின் மீது, வட கொரியா ஜனவரி 5ஆம் நாள் 200க்கும் மேலான பீரங்கி குண்டுகளை வீசியது. இதற்கு பதில் அளிக்கும் விதம் தென் கொரிய உரிய நடவடிக்களை மேற்கொள்ள உள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் ஜனவரி 5ஆம் நாள் கூறுகையில், தற்போதைய சூழ்நிலையில், தொடர்புடைய தரப்புகள் கட்டுப்பாடு மற்றும் தெளிந்த சிந்தனையுடன் செயல்பட்டு, சூழ்நிலையைத் தீவிரமாக்கும் நடவடிக்கைகளை தவிரக்க வேண்டும் என்று சீனா விரும்புவதாக தெரிவித்தார்.