கடத்தப்பட்ட கப்பலை மீட்க சென்ற இந்திய போர்க்கப்பல்
2024-01-05 18:31:53

சோமாலியாவின் கடற்கரைக்கு அருகில் கடத்தப்பட்ட கப்பலை மீட்கும் விதம், இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று அங்கே சென்றுள்ளது என்று இந்திய ஊடகம் 5ஆம் நாள் தகவல் வெளியிட்டது.

இந்திய இராணுவத்துக்கு 4ஆம் நாளிரவு கிடைத்த தகவலின்படி, லைபீரிய தேசிய கொடியைக் கொண்ட கப்பல் ஒன்று கடத்தப்பட்டதாகவும், இக்கப்பலில் 15 இந்தியர்கள் உள்ளதாகவும் இந்தியாவின் ஏஎன்ஐ(Asian News International) செய்தி நிறுவனம் தெரிவித்தது.

மேலும், இக்கப்பலின் நிலைமையை அறிந்து கொள்ளும் வகையில், தற்போது கடத்திச் செல்லப்பட்டவருடன் தொடர்பு நிறுவப்பட்டுள்ளதாக, இச்செய்தி நிறுவனம் இராணுவத் துறையினர் ஒருவரின் கூற்றை மேற்கோள்காட்டி தெரிவித்தது.