சீனாவில் வெளியிடப் பணியாளர்களுக்கு உத்தரவாதச் சேவை அதிகரிப்பு
2024-01-06 19:12:06


கடும் குளிர்காலத்தில் வெளியிடங்களில் பணியாற்றுபவர்களுக்கு வசதியான பணிச் சூழலை வழங்கும் வகையில், சீனாவின் பல்வேறு இடங்களில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சமீப நாட்களில், வடக்கு சீனாவிலுள்ள ஹார்பின் நகரில் பூஜியத்துக்குக் கீழ் 20 டிகிரி செல்சியஸ் சூழ்நிலையில் பணி புரிகின்ற தூய்மைப் பணியாளர்களுக்கு 2000க்கு அதிகமான ஓய்வு அகங்கள் அமைக்கப்பட்டன. இதன் மூலம், சாப்படுதல், குடிநீர் அருந்துதல், ஓய்வெடுத்தல், கழிவறைக்குச் செல்தல் போன்ற வசதிகளை அவர்கள் பெற்றுள்ளனர். அதே மாதிரியான அகங்கள் நாடு முழுவதும் ஒரு இலட்சத்து 6ஆயிரத்துக்கும் மேம் அமைக்கப்பட்டுள்ளன.

தவிரவும், 2024ஆம் ஆண்டில் ஷாங்காய் மாநகரின் பூடோ பகுதியில்  டெலிவரி செய்பவர்களுக்கு 1000 படுக்கைகள் கொண்ட அரசு மானித்திலான அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கப்படுவதாக அப்பகுதி அரசு வாரியம் திட்டமிட்டுள்ளது.

மேலும், ஹெபெய், ஷான்டொங் முதலிய மாநிலங்களில், டெலிவரி செய்பவர்களுக்கும் மருத்துவ மனையில் மருத்துவ சிகிச்சை போன்ற சேவைகளில் சலுகைகள் வழங்கப்படுகின்றன.