கெர்மன் குண்டுவெடிப்பின் சந்தேக நபர்கள் கைது:ஈரான்
2024-01-06 17:10:07

ஈரானின் கெர்மனின் நகரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட 11 பேரைக் கைது செய்துள்ளதாக அந்நாட்டு உளவுத் துறை 5ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

குண்டுவெடிப்புத் தாக்குதலுக்குப் பின், ஐ.எஸ்.தீவிர அமைப்பைச் சேர்ந்தவர்களை உளவுத் துறை கண்டறிந்து பின்பற்றியது. 6 மாநிலங்களில் இந்த 11பேர்கைது செய்யப்பட்டனர். மேலும், தற்கொலை குண்டுவெடிப்பில் பங்கெடுத்த 2 பேரில், ஒருவர் தஜிகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர். இன்னொருவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.