2023இல் திபெத்தில் பயணம் மேற்கொண்டவரின் எண்ணிக்கை அதிகரிப்பு
2024-01-07 17:58:26

2023ஆம் ஆண்டில் 5 கோடியே 50 இலட்சம் பயணிகள் சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டனர். இதன் மூலம் திபெத்துக்கு மொத்தமாக 6500 கோடி யுவான் வருமானம் கிடைத்துள்ளது. பயணிகளின் எண்ணிக்கை மற்றும் சுற்றுலா வருமானம் வரலாற்றில் மிக அதிகமான பதிவை அடைந்துள்ளன. ஜனவரி 7ஆம் நாள் நடைபெற்ற திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் 12ஆவது மக்கள் பேரவையின் 2ஆவது கூட்டத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.

2024ஆம் ஆண்டில் திபெத், பண்பாட்டு சுற்றுலாப் பயணம், சுகாதார நலவாழ்வு ஆகிய தனிச்சிறப்பியல்ப்புகளைப் பயன்படுத்தி, நெடுஞ்சாலை இணைப்பு வசதிகளை மேம்படுத்தி, கிராமங்களைச் சீரமைத்து வருகிறது.