வடமேற்கு பாகிஸ்தானில் காவற்துறை வாகனம் மீது வெடிகுண்டுத் தாக்குதல்
2024-01-08 17:41:13

பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா மாநிலத்தின் பஜார் மாவட்டத்தில் 8ஆம் நாள் காவற்துறையினர் பயணித்த வாகனத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், 6 பேர் உயிரிழந்தனர், 22பேர் காயமடைந்தனர் என்று காவற்துறை தெரிவித்தது.

போலியோ தடுப்பூசிகளைச் செலுத்தி கொண்டவர்களுக்கான பாதுகாப்புப் பணியில் அவர்கள் ஈடுபட்டிருந்தபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பஜார் மாவட்டக் காவற்துறைத் தலைவர் காஷிப் சுல்பிகார் தெரிவித்தார்.

தாக்குதலில் காயமுற்றவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவற்துறையினர் அவ்விடத்தை சம்பவ இடத்தை முற்றுகையிட்டு, புலனாய்வு மேற்கொண்டு வருகின்றனர்.