2023ஆம் ஆண்டில் 40 கோடிக்கும் அதிகமான டன் தானியப் பொருட்கள் கொள்முதல்
2024-01-09 16:03:09

2023ஆம் ஆண்டில் சீனாவில் 40 கோடிக்கும் அதிகமான டன் தானியப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டன என்று தேசிய தானிய மற்றும் பொருள் இருப்பு பணிக் கூட்டத்திலிருந்து கிடைத்த தகவல் கூறியது.

இதுவரை முக்கிய உற்பத்தி பகுதிகளில்  2023ஆம் ஆண்டின் இலையுதிர்காலத்தில் ஏறக்குறைய 12 கோடி டன் தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. தேசிய இலையுதிர் தானிய கொள்முதல் பணி, நிலையாகவும் ஒழுங்காகவும் இருந்தது.

தற்போது இலையுதிர் தானிய மொத்த கொள்முதல் முன்னேற்றம் சுமார் 60 விழுக்காட்டு கொள்முதல் பணி நிறைவடைந்தது.

2003ஆம் ஆண்டில் இலையுதிர் கால தானியங்கள் விற்கத் தொடங்கிய பிறகு, முக்கிய இலையுதிர் கால தானிய வகைகளின் வினியோகம் போதுமானதாகவும் சந்தை செயல்பாடு பொதுவாக நிலையானதாகவும் இருந்தது. 2023ஆம் ஆண்டில் மொத்த இலையுதிர் தானிய கொள்முதல் தொகை கடந்த சில ஆண்டுகளில் மிக உயர்ந்த நிலையை எட்டக் கூடும்.