© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 2ஆவது கூட்டத் தொடர் 5ஆம் நாள் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் துவங்கியது. ஷிச்சின்பிங் உள்ளிட்ட நாட்டின் தலைவர்கள் அதன் துவக்க விழாவில் பங்கேற்றனர். சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் இக்கூட்டத்தொடருக்கு அரசுப் பணியறிக்கை வழங்கினார்.
இவ்வறிக்கையின் சுட்டிக்காட்டுகையில், நவீனமயமாக்க தொழில் அமைப்பு முறையின் கட்டுமானத்தைப் பெரிதும் முன்னெடுத்து புதிய உற்பத்திச் சக்தியின் வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும். புத்தாக்கத்தின் தலைமை பங்கை முழுமையாக வெளிக்கொணர்ந்து அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்கத்தின் மூலம் தொழிலின் புத்தாக்கத்தை முன்னேற்ற வேண்டும். மேலும், புதிய ரக தொழில்மயமாக்கலை விரைவுபடுத்திச் சமூக உற்பத்தி ஆற்றலின் புதிய முன்னேற்றத்தை நனவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.