தூதாண்மை குறித்த செய்தியாளர் கூட்டம் 7ஆம் நாள் நடைபெறுதல்:என்.பி.சி.
2024-03-06 14:23:50

சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 2ஆவது கூட்டத்தொடர் வரும் மார்ச் 7ஆம் நாள் காலை 10மணியளவில் செய்தியாளர் கூட்டம் ஒன்றைப் பெய்ஜிங்கில் நடத்தவுள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ இதில் பங்கேற்று சீனாவின் தூதாண்மைக் கொள்கை மற்றும் வெளிநாட்டுறவு குறித்து சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவுள்ளார்.