அஷ்டோட் துறைமுகத்தைத் திறக்குமாறு இஸ்ரேலுக்கு ஐ.நா. வேண்டுகோள்
2024-03-08 10:21:51

காசா பகுதிக்குச் செல்ல வேண்டிய மனிதாபிமான நிவாரணப் பொருட்கள், முக்கியமாக காசா பகுதி நுழைவாயிலின் வழியாக வினியோகிக்கப்படுகின்றன. மொத்த அளவு குறைவு காரணமாக வான் வழியாக மட்டும் உதவிப் பொரட்களை வீசுவது, சாராம்ச ரீதியில் பிரச்சினையைத் தீர்க்க முடியாது.

எனவே, வடக்குக் காசா பகுதியில் உள்ள மக்கள் நிவாரணப் பொருட்களை எளிதாகப் பெறும் வகையில், காசா பகுதிக்கு வடக்கே அமைந்துள்ள இஸ்ரேலின் அஷ்டோட் துறைமுகத்தை திறக்குமாறு ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட அலுவலகம் மார்ச் 7ஆம் நாள் இஸ்ரேலுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.