© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவுத் திட்டப் பணிகளில் 125 கோடி டாலர் முதலீடு செய்வதற்கு தலைமை அமைச்சர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் குழு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
நெடுநோக்குத் திட்டங்கள், பொது மற்றும் தனியார் அமைப்புகளின் ஒத்துழைப்பு மூலம் ஏஐ புத்தாக்கத்தை உருவாக்குவதற்கு விரிவான சூழலை இந்தியாஏஐ திட்டம் வகுக்கும் என்று அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தை இந்திய டிஜிட்டல் நிறுவனத்தின் கீழ் இயங்கும் இந்தியாஏஐ சுய வணிகப் பிரிவு அமல்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.