ரஷியா மற்றும் உக்ரைன் பங்கெடுக்கும் உச்சி மாநாட்டுக்கு துருக்கி ஆதரவு
2024-03-09 17:09:58

துருக்கி அரசுத் தலைவர் எர்டோகன், துருக்கியில் பயணம் மேற்கொண்டுள்ள உக்ரைன் அரசுத் தலைவர் ஜெலென்ஸ்கியுடன், மார்ச் 8ஆம் நாள் வெளிப்படையற்ற பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கு பிறகு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், எர்டோகன் கூறுகையில், ரஷிய-உக்ரைன் மோதல், பேச்சுவார்த்தை மற்றும் அமைதியான வழிமுறையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும். ரஷியா மற்றும் உக்ரைன் பங்கெடுக்கும், இம்மோதலைத் தீர்ப்பதற்கான உச்சி மாநாட்டுக்கு துருக்கி தயார் செய்து, இடத்தை வழங்க விரும்புகிறது என்றார்.

இரு நாட்டு இராணுவ ஒத்துழைப்பு, கருங் கடலில் பயணப் பாதுகாப்பு, உக்ரைனின் துறைமுகப் பாதுகாப்பு, ரஷிய-உக்ரைன் மோதலில் பிணைக் கைதி உள்ளிட்ட பிரச்சினைகள், இந்த வெளிப்படையற்ற பேச்சுவார்த்தையில் விவாதம் நடத்தப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.