கடும் குளிரால் மங்கோலிய நாட்டில் 39லட்சம் கால்நடைகள் உயிரிழப்பு
2024-03-11 15:30:16

மார்ச் 7ஆம் நாள் வரை, கடும் குளிர் மற்றும் பனி புயலால் மங்கோலிய நாட்டில் 39லட்சமான கால்நடைகள் உயிரிழந்ததாக அந்நாட்டு அவசர நிலைமைக் கமிட்டி 11ஆம் நாள் தகவல் வெளியிட்டது.

2023ஆம் ஆண்டு குளிர்காலம் வந்தது முதல், மங்கோலியா  கடும் குளிர் வானிலை மற்றும் பனிப் புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. நாடளவில் சராசரியான பனிப்பொழிவு அளவு 1975ஆம் ஆண்டு முதல் இது வரை மிக அதிகமான பதிவை உருவாக்கியுள்ளது. 80விழுக்காடான நிலப்பரப்பு பனியால் மூடப்பட்டுள்ளது.