© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
பாலஸ்தீனச் செய்தி ஊடகம் மார்ச் 10ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, அன்று காசா பிரதேசத்தின் பல இடங்களின் மீது இஸ்ரேல் படை வான் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 63பேர் உயிரிழந்தனர்.
தற்போது காசா பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் பட்டினி அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு பகுதியில், மீட்புதவிப் பொருட்கள் தரை வழியாக காசாவின் வடக்குப் பகுதிக்குள் இன்னும் அனுப்ப முடியவில்லை என்று அண்மைக் கிழக்குப் பகுதியிலுள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நாவின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனம் அதே நாள் சமூக ஊடகத்தில் தகவல் வெளியிட்டது.
கடந்த அக்டோபரில் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே மோதல் ஏற்பட்டது முதல் இதுவரை, காசா மீதான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளால் 31ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். சுமார் 72ஆயிரம் பேர் காயமடைந்தனர்.