ஐ.நாவின் உறுப்பு நாடுகளின் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு எழுச்சியை பலப்படுத்துதல்
2024-03-12 15:33:50

ஐ.நாவுக்கான சீனாவின் தற்காலிக பிரதிநிதி டைய் பின் மார்ச் 11ஆம் நாள் ஐ.நாவின் பணி வழிமுறை தொடர்பான பொது விவாதக் கூட்டத்தில் உரைநிகழ்த்தினார். ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு என்ற எழுச்சியை ஐ.நாவின் உறுப்பு நாடுகள் பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

முக்கிய சர்வதேச பொது பாதுகாப்பு அமைப்புமுறையாக ஐ.நா விளங்குகிறது. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை விரைவுபடுத்துவதற்கு ஐ.நாவின் உறுப்பு நாடுகள் சிறப்புப் பொறுப்பேற்க வேண்டும். ஐ.நா சாசனத்தின் கோட்பாட்டின் அடிப்படையில், ஐ.நா ஆக்கப்பூர்வமாக பங்காற்றுவதை விரைவுபடுத்தி, ஐ.நாவின் மதிப்பையும் தகுநிலையையும் கூட்டாக பேணிக்காக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். ஐ.நாவின் நிரந்தர உறுப்பு நாட்டுப் பொறுப்பைக் கருதிய சீனா எப்போதும் உணர்வுபூர்வமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. தொடர்புடைய தரப்புகளுடன் சேர்ந்து, ஐ.நாவின் பணி வழிமுறைகளுக்கான ஒத்த கருத்துக்களை செயல்படுத்தி, சர்வதேச அமைதியையும் பாதுகாப்பையும் மேலும் சீராகப் பேணிக்காக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.