ராஃபாவின் மீது இஸ்ரேல் தாக்குதல் நிறுத்த வேண்டும்:உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்
2024-03-17 17:09:58

காசாவின் தெற்கு பகுதியிலுள்ள ராஃபாவின் மீது தரைவழித் தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிடுவது பற்றிய செய்தியில் பெரும் கவனம் செலுத்தி வருவதாக உலக சுகாதார அமைப்பின் பொதுச் செயலாளர் டெட்ரொஸ் 16ஆம் நாள் தெரிவித்தார். ராஃபாவின் மீது இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தி, அமைதியைக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அவர் மேலும் கூறுகையில், ராஃபாவில் மக்களின் அடர்த்தி மிக அதிகமாகவுள்ளது. பொது மக்கள் எத்தகைய பாதுகாப்பு இடத்துக்கும் தப்பிச்செல்ல முடியாது. மோதல் தொடர்ந்து தீவிரமாகினால், மேலதிக உயிரிழப்பு மற்றும் சிரமங்கள் ஏற்படும். காசாவிலுள்ள மனித நேய பேரிடர் தொடர்ந்து மோசமாகாமல் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.