© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
மத்திய காசா பகுதியின் டெய்ர் அல்-பலாஹ் நகரில் உள்ள ஒரு வீட்டின் மீது இஸ்ரேலின் இராணுவம் 17ஆம் நாள் அதிகாலையில் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் டஜன் கணக்கானோர் காயமடைந்தனர். மத்திய காசா பகுதியில் உள்ள நுசைராத் அகதிகள் முகாம் மற்றும் புரேஜ் அகதிகள் முகாம் அன்று இஸ்ரேலின் இராணுவத்தால் தீவிரமாக தாக்கப்பட்டன. குறைந்தது 4 பேர் உயிரிழந்தனர் என்று பாலஸ்தீன செய்தி நிறுவனம் தெரிவித்தது.
பாலஸ்தீன காசா பகுதியின் சுகாதாரத் துறை 17ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, முந்தைய 24 மணி நேரத்தில் காசா பகுதி மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் மொத்தமாக 92 பேர் உயிரிழந்தனர் மற்றும் 130 பேர் காயமடைந்தனர். கடந்த ஆண்டின் அக்டோபரில் புதிய சுற்று பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் தொடங்கியது முதல், காசா பகுதியில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளில் 31 ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 73 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.