இலங்கைக்கு ஏடிபி வங்கி 10 கோடி டாலர் நிதியுதவி
2024-03-18 17:03:50

இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களின் வளர்ச்சிக்காக 10 கோடி டாலர் நிதியதவி அளிப்பதற்கு ஆசிய வளர்ச்சி வங்கி திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. 

இந்நிறுவனங்களுக்கான நிதி ஆதரவுக்கும், பொருளாதார நெருக்கடி மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட வெளிப்புற அழுத்தங்களைச் சமாளிப்பதற்காகவும் நிதியுதவி அளிக்க ஏடிபி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் அந்நாட்டின் வேலைவாய்ப்பில் 45 விழுக்காடும், ஜிடிபி வளர்ச்சியில் 52 விழுக்காடு வகிப்பதாகவும் ஏடிபி வங்கி தெரிவித்துள்ளது. இச்சூழலில் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, குறிப்பாக பெண்கள் நடத்தும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான ஆதரவு அளித்து இத்துறையின் வளர்ச்சிக்கு உதவுவது முக்கியமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.