© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சிரியாவில் தற்போதைய நிலைமை மிகவும் கடினமாக உள்ளது. பாதுகாப்பு, பொருளாதாரம், அரசியல் செயல்முறை முதலியவற்றில் அறைகூவல்களை எதிர்கொள்கிறது என்று ஐநா தலைமைச் செயலாளரின் சிரியாவிற்கான சிறப்பு தூதர் கீர் ஒட்டோ பெடர்சன் 17ஆம் நாள் சிரியாவின் தலைநகரான தமஸ்கஸில் தெரிவித்தார்.
அண்மையில் சிரிய அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான மோதல் தீவிரமடைவது குறித்து, "சிரிய மக்களுக்கு நம்பிக்கையைத் தரும் வகையில்" நெருக்கடியை அரசியல் ரீதியாக தீர்க்குமாறு இரு தரப்பினருக்கும் பெடர்சன் வேண்டுகோள் விடுத்தார். தொடர்புடைய அறைகூவல்களைச் சமாளிக்கச் சிரியாவுக்கு உதவியளிக்கும் வகையில், நிதியை வழங்க ஐ.நா. தொடர்ந்து பாடுபடும் என்று அவர் தெரிவித்தார்.