யாங்சி கழிமுகப்பிரதேசம் ரயில் வசந்த சுற்றுலா தொடக்கம்
2024-03-18 10:14:13

மார்ச் 17ஆம் நாள் வரை, யாங்சி கழிமுகப்பிரதேச ரயில் வசந்த சுற்றுலா போக்குவரத்து தொடங்கிய முதலாவது வார இறுதியில் 76 இலட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. தினமும் சுமார் 25 இலட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வெண்ணிக்கை கடந்த வார இறுதியில் இருந்ததை காட்டிலும் 2 இலட்சம் அதிகம்.

இவ்வாண்டின் யாங்சி கழிமுகப்பிரதேச ரயில் வசந்த சுற்றுலா பயணம் மார்ச் 15ஆம் நாள் முதல் ஏப்ரல் திங்கள் 15ஆம் நாள் வரையான 32 நாட்களில், சுமார் 7 கோடியே 80 இலட்சம் பயணங்கள் ஏற்படக் கூடும். தினமும் 24 இலட்சத்து 38 ஆயிரம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாண்டின் வசந்த சுற்றுலா காலத்தில், சுற்றுலா பயணம் மேற்கொள்வது மற்றும் இறந்தவர்கள் கல்லறை சுத்தம் செய்வது முக்கியமாக ஏற்படுத்தப்பட்டன. ரயில் வாரியங்கள் பயணிகளின் நிலைமையின்படி, பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு போக்குவரத்து சேவையை மேம்படுத்தும்.