இந்திய தலைமை அமைச்சர் மோடி, உக்ரைன் அரசுத்தலைவர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடினார்
2024-03-21 19:08:47

இந்தியா-உக்ரைன் கூட்டுறவை வலுப்படுத்துவது குறித்து, உக்ரைன் அரசுத்தலைவர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசி மூலம் உரையாடியதாக இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்தார். 

"அமைதிக்கான அனைத்து முயற்சிகளுக்கும், நடந்துகொண்டிருக்கும் மோதலை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் இந்தியாவின் நிலையான ஆதரவை" தெரிவிப்பதாக ஒரு சமூக ஊடகப் பதிவில் மோடி கூறினார்.

மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையால் வழிநடத்தப்படும் மனிதாபிமான உதவிகளை, இந்தியா தொடர்ந்து மேற்கொள்ளும் என்று அவர் மேலும் கூறினார்.