© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
காசா பிரதேசத்தில் போர் நிறுத்தம் மேற்கொள்வது பற்றி அமெரிக்கா தாக்கல் செய்த புதிய வரைவுத் தீர்மானம் குறித்து ஐ.நா. பாதுகாப்பவை உள்ளூர் நேரப்படி 22ஆம் நாள் 9மணியளவில் வாக்கெடுப்பு நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல்வேறு தரப்பின் அப்பாவி மக்களைப் பாதுகாப்பது மற்றும் அடிப்படை மனித நேய உதவிகளை அளிப்பதற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், போர் நிறுத்தத்தை உடனடியாகவும் நிலையாகவும் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் இப்புதிய வரைவுத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் காவலில் வைக்கப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அதில் வற்புறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, பாலஸ்தீனம்-இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்தம் பற்றிய ஐ.நா பாதுகாப்பவையின் வரைவுத் தீர்மானத்தை அமெரிக்கா பலமுறை நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.