© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் மார்ச் 22ஆம் நாளிரவு நடத்தப்பட்ட கடுமையான பயங்கரவாதத் தாக்குதலில் இதுவரை 133 பேர் உயிரிழந்தனர் என்று ரஷியா தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலை நேரடியாக நடத்திய 4 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தக்க தண்டனை தரப்படும் என்று ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் 23ஆம் நாள் தெரிவித்தார். மேலும், மார்ச் 24ஆம் நாள் நாடளவில் துக்கம் அனுசரித்து அஞ்சலி செலுத்தும் நாளாக அவர் அறிவித்தார்.
தற்போது, ரஷிய கூட்டாட்சிப் புலனாய்வு ஆணையத்தைச் சேர்ந்த நிபுணர்கள் இத்தாக்குதல் நிகழ்ந்த இடத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.