© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
ரஷியாவின் மாஸ்கோவிலுள்ள இசை மண்டபத்தில் நடத்தப்பட்ட கடுமையான பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ரஷிய அரசுத் தலைவர் புதின் 25ஆம் நாள் கூட்டாட்சி பாதுகாப்புக் கூட்டத்தை நடத்தினார்.
இப்பயங்கரவாதத் தாக்குதல் உக்ரைனுடன் தொடர்பு இல்லை. இத்தாக்குதல் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையது என்பறு அனைவரையும் நம்ப வைக்க அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. இத்தாக்குதலை தீவிரவாத அமைப்பு நடத்தியது என்று ரஷியா கருதுகிறது. தீவிரவாத அமைப்பைத் தூண்டியவர் யார் என்பதிலே ரஷியா மேலும் கவனம் செலுத்துகிறது என்று அந்நாட்டு அரசுத் தலைவர் புதின் தெரிவித்தார்.
உக்ரைன் ரஷியாவுடன் போரிடும் ஒரு பகுதியாக இத்தாக்குதல் திகழ்கிறது. ரஷிய சமூகத்தில் பீதியை ஏற்படுத்துவது இத்தாக்குதலின் உள்நோக்கமாகும் என்று புதின் குறிப்பிட்டார்.