© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
பாகிஸ்தானில் உள்ள தாசு Dasu நீர் மின்னாற்றல் நிலையத் திட்டப்பணியின் மீதான பயங்கரவாத தாக்குதல் குறித்து பாகிஸ்தானுக்கான சீனத் தூதரகம் மார்ச் 26ஆம் நாள் அறிக்கையை வெளியிட்டது.
26ஆம் நாள் நண்பகல் ஒரு மணியளவில் சீனத் தொழில் நிறுவனம் கட்டியமைத்த தாசு நீர் மின்னாற்றல் நிலையத் திட்டப்பணியின் வாகனம் பயங்கரவாத தாக்குதலுக்குள்ளானது. இதில் ஐந்து சீனர்களும், பாகிஸ்தான் நாட்டவர் ஒருவரும் உயிரிழந்தனர் என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தானுக்கான சீனத் தூதரகம் இப்பயங்கரவாத செயலை வன்மையாக கண்டித்து, இரு நாடுகளைச் சேர்ந்த உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலையும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு உளமார்ந்த ஆறுதலையும் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுடன் இணைந்து இச்சம்பவத்துடன் தொடர்புடைய பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இத்தாக்குதலைப் புலனாய்வு செய்து, இத்தாக்குதல் மேற்கொண்டவரைத் தண்டிக்க வேண்டும் என கோருவதாக இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.