இலங்கை தனது கொடியின் கீழ் கப்பல் பதிவை அதிகரிக்க திட்டம்
2024-03-27 17:10:02

இலங்கையின் கொடியின் கீழ் கப்பல்களை பதிவு செய்வதை ஊக்குவிப்பதற்காக தகுதியான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைக்கும் முன்மொழிவுக்கு, இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அரசின் தகவல் துறை  செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது.

கப்பல் பதிவு என்பது நாட்டின் பொருளாதாரத்திற்கு அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தரும் முக்கிய ஆதாரமாக உள்ளது. இந்நடவடிக்கை பல நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் கூறியதாக ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் முன்மொழிவுகளின் மதிப்பீட்டின்

விளைவாக, கொள்முதல் குழுவின் பரிந்துரையின் பேரில் மிகவும் பொருத்தமான நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.