பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல் மீது ஐ.நாவின் கண்டனம்
2024-03-28 10:30:05

பாகிஸ்தானின் கைபர்-பக்துன்க்வா மாநிலத்தைச் சேர்ந்த பெஷம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஐ.நா பாதுகாப்பவை மார்ச் 27ஆம் நாள் வன்மையாகக் கண்டித்துள்ளது.

பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பலியானவர்களின் குடும்பத்தினர்கள், சீன மற்றும் பாகிஸ்தான் அரசுக்கு மிக ஆழ்ந்த இரங்கல் மற்றும் ஆறுதலை ஐ.நா பாதுகாப்பவையின் உறுப்பு நாடுகள் தெரிவித்தன. எந்த வடிவங்களிலான பயங்கரவாதம், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று இந்நாடுகள் மீண்டும் வலியுறுத்தின. சர்வதேசச் சட்டம் மற்றும் ஐ.நா பாதுகாப்பவையின் தீர்மானங்களின்படி, எல்லா நாடுகளும் சீன மற்றும் பாகிஸ்தான் அரசுகளுடன் ஆக்கப்பூர்வமாக ஒத்துழைக்க வேண்டும் என்று இந்நாடுகள் வற்புறுத்தின.