தாசு நீர் மற்றும் மின்னாற்றல் நிலையத்தின் மீதான பயங்கரவாத தாக்குதல் சீன மற்றும் பாகிஸ்தானின் உறவைப் பாதிக்காது:பாகிஸ்தான்
2024-03-29 14:25:07

அண்மையில், தாசு நீர் மற்றும் மின்னாற்றல் நிலையத்தின் திட்டப்பணியைச் சேர்ந்த வாகன அணி ஒன்று தாக்கப்பட்டது. இது குறித்து, பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் முட்டாஸ் சஹ்ரா 28ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், சீனா-பாகிஸ்தான் நெடுநோக்குக் கூட்டாளி உறவு மற்றும் தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கு அளித்த வாக்குறுதியை மீண்டும் வலியுறுத்தினார். பாகிஸ்தானும் சீனாவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் என்று கூறிய அவர், சீன-பாகிஸ்தான் பொருளாதார இடைவழியைக் கூட்டாக வளர்க்க பாடுபட்டு, ஒன்றுக்கு ஒன்று ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் என்றார்.