சிட்சாங் ஜனநாயகச் சீர்திருத்தத்திற்கான 65ஆவது ஆண்டு நிறைவுக் கருத்தரங்கு
2024-03-29 10:27:44

மார்ச் 28ஆம் நாள், சீனாவின் சிட்சாங் ஜனநாயகச் சீர்திருத்தத்திற்கான 65ஆவது ஆண்டு நிறைவு தினமாகும். அதே நாள், சீனாவின் சிட்சாங்கில் நவீனமயமாக்க நடைமுறை பற்றிய சிட்சாங் ஜனநாயகச் சீர்திருத்தத்திற்கான 65ஆவது ஆண்டு நிறைவுக் கருத்தரங்குக் கூட்டம் பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது. இதில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் நேரடியாகவும் இணைய வழியிலும் கலந்துகொண்டனர். கருத்தரங்கில் உரையாற்றிய பத்துக்கும் மேற்பட்ட அறிஞர்கள்  வரலாற்றில் தவிர்க்க முடியாத சிட்சாங் ஜனநாயகச் சீர்திருத்தத்தின் வரலாற்றுப் போக்கு மற்றும் வெளிப்படுத்துதல், சிட்சாங்கின் உயர்தரமுள்ள வளர்ச்சிக்கான பயன்கள் மற்றும் அனுபவங்கள், புதிய யுகத்தில் சிட்சாங் கதையின் சர்வதேசமயமாக்கப் பரவல் முதலிய தலைப்புகள் குறித்து உரைநிகழ்த்தினர். சிட்சாங் பற்றி ஆழமாக ஆராய்ந்த அவர்கள் சாதனைகள் மிக்க சோஷலிய சிட்சாங்கை இதன் மூலம் உலகத்திற்கு வெளிப்படுத்தினர்.

ஜனநாயகச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பிறகு இது வரை, திபெத்தின் மனித உரிமை உத்தரவாதப் பணி அதிகமான சாதனைகளைப் பெற்றுள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையின் அரசியல் மேம்பாடு மற்றும் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிச கட்டமைப்பின் மேம்பாடுகள் இதன் மூலம் வெற்றிகரமான வெளிப்பாடப்பட்டுள்ளன என்று சீன மனித உரிமை ஆராய்ச்சி சங்கத்தின் துணை செயற் தலைவர் வாங் யென்வென் தெரிவித்தார்.