அரசுசார் தொழில் நிறுவனங்களில் கண்காணிப்புப் பணி
2024-03-31 18:55:56

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் மார்ச் 29ஆம் நாள் நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் ஆணையத்தின் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் 20ஆவது மத்திய கமிட்டியின் 2ஆவது முறை கண்காணிப்பு நிலைமை பற்றிய ஒட்டுமொத்த அறிக்கை பரிசீலனை செய்யப்பட்டது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு நடைபெற்ற பிறகு, மத்திய கமிட்டி, இரண்டு முறை கண்காணிப்பு மேற்கொண்டு, மத்திய அரசுசார் தொழில் நிறுவனங்களின் மீது முழுமையாக சோதனை செய்துள்ளதாக இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.