பாலஸ்தீன புதிய அரசு பதவி ஏற்பு
2024-04-01 10:02:57

பாலஸ்தீன தலைமையமைச்சர் முகமது முஸ்தபா தலைமையில் புதிய அரசு, உள்ளூர் நேரப்படி மார்ச் 31ஆம் நாளிரவு, ஜோர்டான் ஆற்றின் மேற்கு கரையின் ரமலான் நகரில் பதவி ஏற்றது.

பாலஸ்தீன புதிய அரசு பதவி ஏற்ற பிறகு, பாலஸ்தீன மக்கள் அனைவருக்கும் சேவை புரிய வேண்டும் என்று முகமது முஸ்தபா வலியுறுத்தினார்.

பதவி ஏற்பு விழாவுக்குப் பிறகு முகமது முஸ்தபா உரை நிகழ்த்திய போது அவர் கூறுகையில்,

பரந்த அரசியல் சீர்திருத்தத்தை மேற்கொண்டு, அரசங்கங்களின் பணி பயனை உயர்த்தி, பாலஸ்தீன மக்களுக்கு மேலும் சேவை புரிந்து, இயன்ற அளவில் காசா பகுதியில் மனித நேய பணியை வலுப்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்.