ஷிஃபா மருத்துவமனை கடுமையான நிலைமையில் சிக்கி கொண்டது:உலகச் சுகாதார அமைப்பு
2024-04-01 14:53:41

காசா பகுதியில் உள்ள ஷிஃபா மருத்துவமனையை இஸ்ரேல் இராணுவம் முற்றுகையிட்டது இரண்டு வாரங்களாக நீடித்தது. இதனால் இம்மருத்துவமனையில் 21  நோயாளிகள் உயிரிழந்தனர். இன்னும் 107  நோயாளிகள் அவசரமாக வெளியேற்றப்பட வேண்டும் என்று உலகச் சுகாதார அமைப்பு மார்ச் 31ஆம் நாள் கூறியது.

தொடர்புடைய தரப்புகள் ஐ.நா.பாதுகாப்பவையின் கோரிக்கையைப் பின்பற்றி, காசா பகுதியில் போரையும் இம்மருத்துவமனையின் மீதான இராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உலகச் சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.