பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த சீன நாட்டவர்களின் பூதவுடல்கள் சீனாவுக்குத் திரும்புதல்
2024-04-02 10:04:42

பாகிஸ்தானில் டாசு ஜல மின்னாற்றல் நிலையத் திட்டப்பணி குறித்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த 5 சீன நாட்டவர்களின் பூதவுடல்கள், பாகிஸ்தான் இராணுவ விமானத்தின் மூலம், தாய்நாட்டுக்குத் திரும்பியது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங்வென்பின் ஏப்ரல் முதல் நாள் இத்தகவலை வெளியிட்டார்.

மிக பெரும் மன உறுதி மற்றும் முயற்சியுடன், பாகிஸ்தான் மெய்நிலையைப் புலனாய்வு செய்ய சீனத் தரப்பு உறுதியாக ஆதரவளிக்கிறது. கொலையாளிகள் மற்றும் பயங்கரவாத தாக்குதலைத் தூண்டியவருக்கு தக்க தண்டனை விதிக்க வேண்டும். பாகிஸ்தானில் சீனப் பணியாளர்கள் மற்றும் நிறுவனங்களின் பாதுகாப்பை மாபெரும் முயற்சியுடன் உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.