© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
ஐ.நாவின் துணை தலைமை செயலாளர் ஹாலித் ஹீரி ஏப்ரல் 2ஆம் நாள், சிரியாவுக்கான ஈரான் தூதரகம் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் மீது கண்டனம் தெரிவித்துள்ளது. தூதரகங்கள் ஊறுபடுத்தப்பட முடியாது என்பதை நிபந்தனையின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும். ஐ.நாவின் உறுப்பு நாடுகளின் இறையாண்மை மற்றும் உரிமை பிரதேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஈரானின் கோரிக்கையின்படி, இத்தாக்குதல் குறித்து ஐ.நா பாதுகாப்பவை அதே நாள் அவசர கூட்டம் ஒன்றை நடத்தியது. ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்ரேஸின் தாக்குதல் மீதான கண்டனத்தை ஹாலித் ஹீரி இக்கூட்டத்தில் வலியுறுத்தினார்.
தொடர்புடைய தரப்புகளுடன் ஐ.நா பாதுகாப்பவை ஆக்கப்பூர்வமாகத் தொடர்புகொள்ள வேண்டும். இந்நிலைமை மேலும் தீவிரமாகி, பிரதேசத்தின் நியாயமற்ற நிலைமையைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்