© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
கியூபாவின் பொருளாதாரம், வணிகம் மற்றும் நிதி மீதான அமெரிக்காவின் முற்றுகை சர்வதேச சட்டத்தையும் கியூபா மக்களின் மனித உரிமையையும் மீறியுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர் என்று கியூபா வெளியுறவு அமைச்சகத்தின் இணையத்தளத்தில் ஏப்ரல் 2ஆம் நாள் வெளியிடப்பட்ட ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கியூபா மீது அமெரிக்கா ஒரு சார்பாகத் தடை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது கியூபா மக்களின் உயிர், உணவு மற்றும் உடல் நல உரிமைகளையும், கியூபாவின் வளர்ச்சி உரிமையையும் கடுமையாகப் பாதித்துள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணம் 60 நாட்கள் ரகசிய காலத்துக்குப் பின் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்கா இன்னும் பதிலளிக்கவில்லை.