தைவான் நிலநடுக்கம் குறித்து சீனப் பெருநிலப்பகுதி கடும் கவனம்
2024-04-03 10:22:12

ஏப்ரல் 3ஆம் நாள் சீனாவின் தைவான் பகுதியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. சீன அரசவையின் தைவான் விவகாரப் பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் ட்சுஃபுங்லியேன் அம்மையார் கூறுகையில், இதில் சீனப் பெருநிலப்பகுதியின் தொடர்புடைய தரப்புகள் கடும் கவனம் செலுத்தி வருகின்றன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தைவான் உடன்பிறப்புகளுக்கு மனமார்ந்த ஆறுதலைத் தெரிவிப்பதோடு, நிலநடுக்க நிலைமை மற்றும் அதற்குப் பிந்தைய நிலைமையை நெருக்கமாக கவனித்து நிலநடுக்கத்துக்கான நிவாரணப் பணிகளுக்கு உதவியளிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.