எரைஸ் நுழைவாயில் மீண்டும் திறக்கப்படும்
2024-04-05 17:26:36

காசாப் பிரதேசத்தில் உள்ள எரைஸ் நுழைவாயிலை மீண்டும் திறக்க இஸ்ரேல் அரசு அனுமதியளித்துள்ளதாக, இஸ்ரேல் தலைமையமைச்சர் அலுவலகம் உள்ளூர் நேரப்படி ஏப்ரல் 5ஆம் நாள் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் நாள் பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் துவங்கிய பிறகு இந்நுழைவாயில் திறக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.