ஐ.நா.ஹைட்டிக்கு 12 மில்லியன் டாலர் நிதியுதவி
2024-04-05 19:40:47

ஹைட்டியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட உள்ளூர் மக்களுக்கு உதவி அளிக்கும் விதமாக, ஒரு கோடியே 20இலட்சம் அமெரிக்க டாலர் நிதியுதவி அளித்துள்ளதாக ஐ.நா. மனிதாபிமான அலுவல் ஒருங்கிணைப்பு அலுவலகம் 4ஆம் நாள் தெரிவித்தது.

பன்னாட்டு அமைப்பான சி.யீ.ஆர்.எஃ.இன் நிதியுதவி, ஹைட்டியின் தலைநகரிலும் அண்டை மாநிலமான ஆர்டிபோனைடியிலும்(Artibonite)வீடுவாசலின்றித் தவித்தவர்களுக்கும் தங்குமிடங்களுக்கும் உணவு, குடி தண்ணீர், பாதுகாப்பு, மருத்துவச் சிகிச்சை, சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஆகியவற்றை வழங்குவதற்கு பயன்படுத்தப்படும் என்று இந்த அலுவலகம் தெரிவித்தது.