ஜோ பைடன்-நெத்தாயாஹு தொலைபேசி தொடர்பு
2024-04-05 19:32:40

அமெரிக்க அரசுத்தலைவர் ஜோ பைடன் ஏப்ரல் 4ஆம் நாள் இஸ்ரேல் தலைமையமைச்சர் நெதன்யாகுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசுகையில், இஸ்ரேல் காசாவிலுள்ள அப்பாவி மக்களைப் பேணிக்காக்கும் நடவடிக்கைகளின் மீது அமெரிக்காவின் மதிப்பீட்டின் படி, காசா தொடர்பான  அமெரிக்காவின் கொள்கை வகுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இஸ்ரேல் மனித நேய பணியாளர்களின் மீது தாக்குதல் நடத்தும் நடவடிக்கையும் காசா பிரதேசத்தின் ஒட்டுமொத்த மனித நேய நிலைமையும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என்று பைடன் தெரிவித்தார்.

இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையினால் காசா பிரதேசத்தின் அப்பாவி மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பைக் குறைக்கவும், காசா பிரதேசத்தின் மனித நேய தீமையைத் தணிவு செய்யவும், உதவிப்பொருட்களை ஏற்றிச்சொன்ற பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இஸ்ரேல் பல குறிப்பிட்ட நடவடிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் பைடன் கூறினார்.