ஈக்வேடார்-மெக்சிகோ சர்ச்சையை நிறுத்த வேண்டும்:ஐ.நா
2024-04-07 15:00:09

ஈக்வேடருக்கான மெக்சிகோதூதரகத்தில் ஈக்வேடார் காவற்துறையினர்கள் நுழைந்து, அங்கு அடைக்கலம் கேட்ட முன்னாள் அரசுத் தலைவரைக் கைது செய்துள்ளது குறித்து ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரேஸ் அண்மையில் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஐ.நா பொதுச் செயலாளரின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் 6ஆம் நாள் தெரிவித்தார்.

பிற நாடுகளுக்கான தூதரகம் ஊறுபடுத்தப்பட முடியாது என்ற முக்கியத்தை ஆன்டோனியோ குட்டரேஸ் வலியுறுத்தினார். எந்த நிலைமையிலோ, சர்வதேச சட்டத்தின்படி, இக்கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இரு நாடுகளும் அமைதியான வழிமுறையின் மூலம் சர்ச்சையைத் தீர்க்க வேண்டும் என்றும் ஆன்டோனியோ குட்டரேஸ் குறிப்பிட்டார்.