பாகிஸ்தான்-துருக்கி அரசுத் தலைவர்கள் தொடர்பு
2024-04-07 19:16:11

உள்ளூர் செய்தி ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, பாகிஸ்தான் அரசுத் தலைவர் ஆசிப் அலி சர்தாரி, ஏப்ரல் 7ஆம் நாள் துருக்கி அரசுத் தலைவர் எர்டோகனுடன் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டார். பொது அக்கறை கொண்ட விவகாரங்களை இரு தரப்பினரும் விவாதித்ததோடு, பல்வேறு துறைகளில் இரு தரப்புறவை வலுப்படுத்தும் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர். மேலும், பாகிஸ்தானில் பயணம் மேற்கொள்ளுமாறு எர்டோகனுக்கு சர்தாரி அழைப்பு விடுத்தார்.