© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
எகிப்து பாதுகாப்புத் துறையின் உயர் நிலை அதிகாரி ஏப்ரல் 8ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, காசாவில் போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தையில் பங்கேற்ற பல்வேறு தரப்புகளின் பிரநிதிதிக் குழு தற்காலிகமாக கெய்ரோவை விட்டுச் சென்றனர். 2 நாட்களுக்குள் அவர்கள் மீண்டும் திரும்பி இறுதியான போர் நிறுத்த திட்டத்தின் குறிப்பிட்ட விதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
கத்தாரின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மஜித் அன்சாரி அன்று கூறுகையில், போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தை இன்னும் நிறைவடையவில்லை. போர் நிறுத்தம் குறித்த உடன்படிக்கை உருவாக்குவதில் கத்தார் முன்வை விட, மேலும் நம்பிக்கையுள்ளதாக இருக்கிறது என்றார். ஆனால், பல செய்தி ஊடகங்களின் தகவல்களை ஒன்றிணைந்து பார்த்தால், அன்று இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்துக்கும் நம்பிக்கை உணர்வு வெளிப்படவில்லை.