© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் கீழ், அரசாங்கத்திற்கு சொந்தமான வங்கிகளின் நிர்வாகத்தை சீர்திருத்துவதற்கான முன்மொழிவுக்கு இலங்கையின் அமைச்சரவை கடந்த திங்கட்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது என்று அமைச்சரவையின் செய்தித்தொடர்பாளர் பந்துல குணவர்தன செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட சீர்திருத்தங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக குணவர்தன கூறினார்.
இந்த சீர்திருத்தங்கள், அரசுக்கு சொந்தமான வங்கிகளின் நிர்வாகம், இடர் மேலாண்மை மற்றும் மேற்பார்வை ஆகியவற்றில் உள்ள பலவீனங்களை நிவர்த்தி செய்ய முயல்கின்றன என்றும், இந்த சீர்திருத்தங்கள் விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
2023 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில், இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக, சுமார் 300 கோடி அமெரிக்க டாலர்கள் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ், 48 மாத நீட்டிக்கப்பட்ட ஏற்பாட்டிற்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.