சீனாவின் ஒத்துழைப்புடன் இலங்கையில் வேளாண்துறை ஆய்வகம்
2024-04-11 17:33:34

சீனாவின் ஒத்துழைப்புடன் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைத் திட்டத்தின் கீழ் இலங்கையில் ஆய்வகம் ஒன்றை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ள இலங்கையில் சீன ஆய்வுக் குழுவினர் சமீபத்தில் பயணம் மேற்கொண்டனர்.

இலங்கையில் பாரம்பரிய வேளாண் நடைமுறை மற்றும் தேயிலை பயிரிடுதல் முக்கியமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்களைப் பரவல் செய்யும் நோக்கில் இந்த ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது.

பெரிய தரவுகளின் அடிப்படையில் இரசாயனப் மருந்து பயன்பாடுகளைக் குறைப்பது, தேயிலைத் தோட்டங்களில் பூச்சிகள் மற்றும் களைகளைக் கட்டுப்படுத்தும் விதம் உயிரியல் கட்டுப்பாட்டு தொழில் நுட்பம், இடர் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு தொழில்நுட்பம் ஆகிய    முக்கியமான மூன்று பிரிவுகள் குறித்து இந்த ஆய்வகம் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.