இஸ்ரேலின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது பற்றி சீன வெளியுறவு அமைச்சகம் செய்தியாளருக்கு பதிலளிப்பு
2024-04-14 20:47:48

இஸ்ரேலின் மீது ஈரான் ராணுவ தாக்குதல் நடத்தியது பற்றி, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஏப்ரல் 14ஆம் நாள் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

தற்போது நிலைமை தீவிரமாகியுள்ளது குறித்து சீனா பெரும் கவனம் செலுத்தி வருகிறது. தீவிராமான நிலைமை மேலும் மோசமாகாமல் தவிர்க்கும் வகையில் தொடர்புடைய தரப்புகள் அமைதியையும் கட்டுப்பாட்டையும் நிலைநிறுத்த வேண்டுமென சீனா வேண்டுகோள் விடுத்தது. இந்நிலைமை, காசா மோதல் மேலும் விரிவாகுவதைக் காட்டுகிறது. ஐ.நா பாதுகாப்பவையின் 2728ஆவது தீர்மானத்தை நிறைவேற்றி, காசா மோதலை வெகுவிரைவில் தணிவுப்படுத்துவது தற்போதைய அவசரக் கடமையாகும். சர்வதேச சமூகம் குறிப்பாக செல்வாக்கு மிகுந்த நாடுகள், பிரதேசத்தின் அமைதியையும் நிதானத்தையும் பேணிகாக்க ஆக்கப்பூர்வத்தன்மை பங்கினை ஆற்ற வேண்டும் என்றும் இவர் தெரிவித்தார்.