உலக கோப்பைப் பாறை ஏறுதல் போட்டியில் ஆசிய பதிவைப் படைத்த சீன அணி
2024-04-15 14:55:19

2024ஆம் ஆண்டு ஐ.ஃபு.எஸ்.சி. உலகக் கோப்பைப் பாறை ஏறுதல் போட்டி ஏப்ரல் 14ஆம் நாள் சீனாவின் ஜியாங்சு மாநிலத்தின் சுச்சோ நகரில் நிறைவடைந்தது. இப்போட்டியில் சீன அணி ஒரு தங்கம் பதக்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்று ஆசிய அளவில் புதிய பதிவை உருவாக்கியது. 3நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் 37 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 236 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். பாரிஸ் ஒலிம்பிக்கு முன்பு மிக முக்கியமான சர்வதேச பாறை ஏறுதல் போட்டியாக இது விளங்கியுள்ளது.