சீன-காபொன் அரசுத் தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து
2024-04-20 17:16:59

சீன-காபொன் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும், காபொன் தற்காலிக அரசுத் தலைவர் எகுயேமாவும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்தனர்.

ஷி ச்சின்பிங் கூறுகையில், கடந்த 50 ஆண்டுகளாக, சீனாவும் காபொனும் ஒன்றுக்கொன்று ஆதரவளித்து, இரு தரப்புறவை இடைவிடாமல் உயர்த்தி, இரு நாட்டு மக்களுக்கு உண்மையான நலன்கள் வழங்கியுள்ளன. நான் இரு நாட்டுறவின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து, அரசுத் தலைவர் எகுயேமாவுடன் இணைந்து இரு நாடுகளின் பயனுள்ள ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, உயர் நிலையிலான சீன-ஆப்பிரிக்கப் பொது எதிர்காலச் சமூகத்தைக் கூட்டாக உருவாக்க விரும்புகிறேன் என்றார்.

எகுயேமா கூறுகையில், ஒரே சீனா என்ற கோட்பாட்டை காபொன் உறுதியுடன் பின்பற்றி வருகிறது. சீனாவுடன் இணைந்து, இரு நாட்டுப் பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவின் வளர்ச்சியை முன்னேற்றி, இரு நாட்டு மக்களுக்கு நன்மை புரிய விரும்புவதாக தெரிவித்தார்.