சிங்சியாங் உய்கூர் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தில் பல தேசிய இன மக்கள் குழுமி வாழ்கின்றனர். அவர்களில், 10 தேசிய இனங்கள் இஸ்லாமிய மதத்தின் மீது நம்பிக்கை கொள்கின்றன. ஒரு கோடியே 90 லட்சம் மக்கள் தொகையின் ஏறக்குறைய ஒரு கோடி மக்கள் முஸ்லிம்களாவர். சிங்சியாங்கின் பல்வேறு இடங்களில் பரவியிருக்கும் மசூதிகளுக்குத் தேவையான மத போதகர்களின் தேவையை நிறைவேற்றும் வகையில், இத்தன்னாட்சிப் பிரதேசத்தின் அரசு இஸ்லாமிய மதக் கல்லூரி இஸ்லாமிய மறையியல் பள்ளி உள்ளிட்ட உயர் நிலை மதப் பள்ளிகளை நிறுவியுள்ளது. இப்போது இஸ்லாமிய மறையியல் பள்ளி மாணவர் பற்றிக் காண்போம்.
1999ல் கட்டிமுடிக்கப்பட்ட இப்பள்ளி தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான உருமுச்சியின் வடக்கில் அமைந்துள்ளது. இரண்டு திங்களுக்கு ஒரு முறை 200 மாணவர் இப்பள்ளியில் சேர்க்கப்படுகின்றனர்.
1 2 3 4
|