முதியோரும் இளைஞரும் மாணவர்களாக உள்ளனர். பெரும்பாலான முதிய மாணவர்களைப் பொறுத்த வரை, இப்பள்ளியில் சேர்வது அவர்களின் வாழ்வில் முதல் முறையாகும்.
கிழக்கு சிங்சியாங் ஹார்மி நகரிலிருந்து வந்த மொஹமத் சூபி எனும் 70 வயது முதியவர் தமது பள்ளி வாழ்க்கை குறித்து மகிழ்ச்சியுடன் கூறினார். இப்பள்ளியின் சூழல் மிகவும் அருமையானது. பணியாளர் எமது விடுதிகளையும் உணவு விடுதிகளையும் தூய்மையாகத் துப்புரவு செய்கின்றனர். மத வட்டாரத்தினர் என்ற முறையில், எங்கள் பள்ளியைப் பேணிக்காக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இப்பள்ளியில் பெரிய மசூதி ஒன்றும் உள்ளது. மாணவர்கள் இதில் தொழுகை புரிகிறார்கள். நாங்கள் ஒரு புறம் கல்வி கற்கிறோம். மறுபுறம் சுதந்திரமாக மத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றோம். உருமுச்சி நகரிலுள்ள மசூதிகளைப் பார்வையிடவும் மதப் பிரமுகர்களுடன் பரிமாறவும் இப்பள்ளி எங்களுக்கு ஏற்பாடு செய்து தருகின்றது. மத நம்பிக்கையாளர்களுடன் பரிமாறிக் கொள்ளும் இன்பத்தை நான் உண்மையில் நுகர்ந்து கொண்டேன் என்று சிற்றூரிலிருந்து வந்த ஜுஸ் மாய்மாய்திகாஸ் எனும் இமாம் கூறினார்.
1 2 3 4
|